
தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா.
திருவாரூர் அருகே காட்டூரில் அண்மையில் நடைபெற்ற கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சியைத் தொடக்கிவைத்து, மேலும் அவர் பேசியது:
வறுமை ஒழிப்புத் திட்டங்களில் முன்னோடித் திட்டமான புதுவாழ்வுத் திட்டத்தில் செயல்படும் அனைத்து கிராம வறுமை ஒழிப்பு மற்றும் ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு செய்தது.

நிகழ்ச்சியில் புதுவாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் சு. கலைவாணி, உதவி திட்ட மேலாளர்கள் சு. அருள், ஆ. கலைமணி, பி. சரவணன், ஹரிதாஸ் (திறன் வளர்ப்பு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக