திங்கள், 29 ஜனவரி, 2018

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதைக்கண்ட வேதனையில் விவசாயி சாவு

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதைக்கண்ட வேதனையில் விவசாயி சாவுதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் ராதா(வயது 60). விவசாயியான இவர், அருகில் உள்ள இஞ்சடிகோட்டகத்தில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் 2 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளார்.

கடுமையான வறட்சி, ஏமாற்றிய பருவமழை ஆகியவற்றால் 2 முறை தெளித்து வீணாகிய பிறகு 3-வது முறையாக தெளித்த பயிர் தற்போது வளர்ந்து அறுவடைக்கு வரும் நிலையில் தண்ணீர் இல்லாததால் வளர்ந்த பயிர் கருக தொடங்கி உள்ளதை கண்டு கடந்த சில நாட்களாக விவசாயி ராதா, வேதனை அடைந்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று தான் சாகுபடி செய்த வயலுக்கு சென்ற விவசாயி ராதா, கருகிய பயிர்களை நீண்ட நேரம் பார்த்தபடி இருந்தார். அப்போது வேதனையில் அவருக்கு ‘திடீர்’ என்று மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

வயலுக்கு சென்ற விவசாயி ராதா, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் பதறிய அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவர் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு வந்த ராதாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் ராதாவின் உடலை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். இறந்த ராதாவிற்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. ஆடலரசன், மரணம் அடைந்த விவசாயி ராதா வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிவேல், ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

கருகிய பயிரை கண்டு விவசாயி ஒருவர் வேதனையில் மரணம் அடைந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

ஆலிவலம் போலீஸ் நிலையம் கிராம மக்கள் முற்றுகை

வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகைதிருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி ஊராட்சி கரும்பியூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). தே.மு.தி.க. கிளை செயலாளர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இந்த நிலையில் கண்ணனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் பேன்சி கடை வைத்திருந்த கருணாநிதியிடம், ஊர்வலத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தகராறில் ஈடுபட்டதாக ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் வர்த்தக சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் தங்களை ஜாதியை சொல்லி திட்டியதாக கூறி வர்த்தக சங்கத்தை சேர்ந்த 6 பேர் மீது சுரேந்தர், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆலத்தம்பாடி வணிகர்கள் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனை சந்தித்து ஆலத்தம்பாடி வர்த்தக சங்க தலைவர் கருணாநிதியிடம், சுரேந்தர் தகராறில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அளித்தனர். அதன்பேரில் ஆலிவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தபத்மநாதன் நேற்று இளவரசநல்லூரை சேர்ந்த பிரபு, கணேசன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை ஆலிவலம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறி அதனை கண்டித்து கரும்பியூர், ஆலத்தம்பாடி, ஐயூர், கொத்தங்குடி, இளவரசநல்லூர், பழையங்குடி சேர்ந்த கிராம மக்கள் வக்கீல் கார்த்தி தலைமையில் ஆலிவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட் டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் செந்தில்குமாரை போலீசார் விடுவித்தனர்.

இதையடுத்து விசாரணைக்கு அழைத்து சென்ற பிரபு, கணேசன் ஆகியோரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில், தே.மு.தி.க. வினர் ஆலிவலம் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka