புதன், 10 ஆகஸ்ட், 2016

குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் : செல்போனுக்கு குறுஞ்செய்தி


நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் குறித்து அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

 ஆய்வு கூட்டம்


 திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நியாயவிலை கடைகளில் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துதல் தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் பொதுவினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 713 நியாயவிலை கடைகளுக்கும் மின்னணு விற்பனை எந்திரங்கள வழங்கப்பட்டுள்ளன. நியாயவிலை கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களின் விவரம், செல்போன் எண், ஆதார் எண் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் விவரங்களை விற்பனையாளர் பெற்று விற்பனை எந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் குறித்து அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

 குடிமை பொருட்கள்


 இதனால் குடும்ப அட்டைகள் தவறான வகையில் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. மேலும் போலி குடும்ப அட்டைகள் கண்டறிய வழிவகை செய்யப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு மாநிலத்தில் மாவட்ட வாரியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயவிலை கடை விற்பனையாளர்கள் எந்திரத்தை கையாளும் முறைகளை அறிந்து நுகர்வோருக்கு முறையாக குடிமை பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

 கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) அசோகன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் மோதல்: உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அரசு கல்லூரி
திருவாரூர் கிடாரங்கொண்டானில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்ககோரி கடந்த 3–ந் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வணிகவியல் பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக கல்லூரியின் வணிகவியல்துறை துணைத்தலைவர் ராமு திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரில், தன்னையும், பேராசிரியர் சண்முகசுந்தரத்தையும், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். இதேபோல் கல்லூரி மாணவர் நீல்ஆம்ஸ்ட்ராங் போலீசில் அளித்த புகாரில், தன்னையும், தன்னுடன் படிக்கும் மாணவர்களையும், வணிகவியல் துறை துணைத்தலைவர் ராமு, பேராசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் மாணவர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பேச்சுவார்த்தை
மாணவர்கள் இடையே நடந்த மோதலால் கடந்த 4–ந் தேதியில் இருந்து கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் மோதல் குறித்து திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் முத்துமீனாட்சி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு கல்லூரிகளின் தஞ்சை மண்டல இணை இயக்குனர் பியாட்ரிஸ்மார்க்ரெட், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வருகிற 12–ந் தேதி கல்லூரியை மீண்டும் திறப்பது என்றும், மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திருத்துறைப்பூண்டி, தொண்டி வழியாக மதுரைக்கு புதிய வழித்தடம் தொடங்கக் கோரிக்கை

நாகப்பட்டினத்தில் இருந்து  கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, தொண்டி, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரைக்கு பதிய வழித்தடம் தொடக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 நாகையில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர். பதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு (சுமார் 250 கி.மீ.) தினசரி அரசுப் போக்குவரத்துக் கழகம், நாகை, கும்பகோணம், காரைக்குடி, மதுரை, திருச்சி கோட்டங்களின் சார்பிலும், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாகவும், நாகையில் இருந்து தஞ்சைக்கு நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாகவும், வாகனப் போக்குவரத்தில் மிகவும் சிக்கலான நிலை ஏற்படுகிறது. மேலும் குறித்த நேரத்தில் வாகனங்கள் செல்வதில் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது.

 இதற்கு அடுத்தபடியாக மதுரையில் இருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி,  பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி வழியாக சில வழித்தடங்களும்  இயக்கப்படுகிறது. இதுவும் ஏறத்தாழ 250 கி.மீ. தூரம்தான்.

 இதைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினத்தில் இருந்து, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், கட்டுமாவடி, மீமிசல், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சென்று, திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரைக்கு புதியவழித்தடம் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தென்மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்ஹா, மற்றும் நவகிரக தலங்கள், சஷ்டியப்த பூர்த்தி நடைபெறும் திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் வருபவர்கள் இந்த வழியையே விரும்புகின்றனர்.

இந்த வழித்தடத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு 250 கி.மீ. தூரமே ஆகும்.  மேலும் போக்குவரத்து நெருக்கடியான சூழல் இல்லாத நிலை உள்ளதால் நாகையில் இருந்து திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை வழியாக போக்குரத்து நெருக்கடியில் சிக்கித்தவித்து கூடுதல் காலவிரயத்தைத் தவிர்க்கும்  வகையில் இந்த புதிய வழித்தடத்தில் மதுரைக்கு பேருந்தை இயக்க வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சனி, 6 ஆகஸ்ட், 2016

Yahoo வின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் : ஹீரோவிலிருந்து ஜீரோ

Yahooஒரு காலத்தில் இணையம் என்றாலே அது Yahoo தான் என்றிருந்தது. மிகப் பெரிய இணையத்தள பூதமாக இருந்த Yahoo, பல நிறுவனங்களை வாங்கும் அளவிற்கு இருந்த Yahoo, இன்று தனது மதிப்பை இழந்து வெறும் $4.8 பில்லியன் டாலருக்கு Verizon நிறுவனம் வாங்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. எல்லா விசயங்களையும் Yahoo வில் தேடிய காலம் மாறி, யாகூவை கூகுளில் தேடும் காலம் உருவானது.
1994-ம் ஆண்டு டேவிட் பிலோ மற்றும் ஜெர்ரி யாங் என்பவர்களால்  “Jerry and David’s Guide to the World Wide Web” என்ற சர்ச் இஞ்சின் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் Yahoo என மாற்றப்பட்டது.

யாகூ நியூஸ், ஃபைனான்ஸ், ஸ்போர்ட்ஸ், இமெயில், சமூக தளங்கள், விளம்பரங்கள், யாகூ ஃபோட்டோஸ், என எல்லாவற்றையும், ஒருங்கிணைத்தது யாகூ. எல்லா தகவல்களையும் அதன் தளத்திலேயே இடம்பெறச் செய்தது. ஆனால், அதுதான் பலருக்கு பிடிக்காமல் போவதற்கும் காரணமாய் அமைந்தது.
Yahoo ஒரே தொழில் மாதிரியை கடைபிடிக்காமல், தாங்கள் ஊடக (media) நிறுவனமா அல்லது ஒரு தொழில்நுட்ப நிறுவனமா (technology company) என்ற கேள்விகளுக்கு தெளிவில்லாமல் இருமுகதன்மையை பின்பற்றியது.
1998 ஆம் ஆண்டு கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜும், செர்ஜெரி ப்ரினும்அவர்களின் PageRank system தொழில்நுட்பத்தை யாகூவிடம்  $1 மில்லியன் டாலருக்கு விற்க முயன்றனர். அவர்களின் PageRank system தொழில்நுட்பம் மிக விரைவாக தகவல்களை மற்ற இணையத்தளத்திலிருந்து தேடி கொடுக்கும். ஆனால் Yahoo நிறுவனம் எல்லா தகவல்களையும் தங்கள் தளத்திலேயே இடம்பெற செய்து இணைய பயனர்கள் தங்கள் தளத்திலேயே அதிக நேரம் செலவிடவேண்டும் என்று எண்ணி Google ன் PageRank system தொழில்நுட்பத்தை நிராகரித்தது.
ஆனால் Yahoo தகவல்களை மற்ற இணையத்தளத்திலிருந்து தேடி கொடுத்தலில்தான் மிகப் பெரிய சந்தை இருக்கிறது என்பதை கவனிக்க தவறிGoogle –ளிடம் தனது பயனர்களை பறிகொடுத்தது.
2000 ஆம் ஆண்டு Yahoo நிறுவனத்தின் சந்தை மதிப்பு $125 பில்லியன் டாலர். யாஹூ மிகவும் உச்சத்திலிருந்த தருணம் அது.
2001 ஆம் ஆண்டு Yahoo கிட்டத்தட்ட 400 வெவ்வேறு விதமான சேவைகளை கொண்டிருந்தது. ஆனால் Google தேடு பொறி என்ற ஒரே துறையில் கவனத்தை குவித்தது போல, Yahoo ஒரே துறையில் கவனத்தை (focus) குவிக்கவில்லை.  
2002 ஆம் ஆண்டு Yahoo நிறுவனம் கூகுளை $1 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்க தாயராக இருந்தது. கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜும், செர்ஜிபிரின் $3 பில்லியன் டாலர் தொகை கேட்டனர். முன்னாள் யாகூ சிஇஓ Terry Semel இது சரியான விலை என நம்பினார்.
ஆனால் Semel ன் தளபதிகள் சிலர் $3 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கும் அளவிற்கு Google ன் மதிப்பு இல்லை என கூறினர். இதனால் Yahoo நிறுவனம் google ஐ வாங்குவதை கைவிட்டது. ஆனால் இந்த இளம் Google நிறுவனம் தன்னையே இணையத்திலிருந்து வெளியே விரட்டிவிடும் என யாஹூ கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
2005 ஆம் ஆண்டு யாஹூ நிறுவனம் இப்போது உலகின் மிகப் பெரிய இணையத்தள நிறுவனமான Alibaba -வில் $1 பில்லியன் டாலர் முதலீட்டு செய்து 40% பங்கை வாங்கியது. 
இப்பொழுது உள்ள யாஹூவின் சொந்த மதிப்பை விட அது Alibaba -வில் செய்த முதலீட்டின் இன்றைய மதிப்பு அதிகமாகும்.  
அதே ஆண்டில் Yahoo படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான Flickr-ஐ $25 மில்லியன் டாலருக்கு வாங்கியது. 
2006 ஆம் ஆண்டு Yahoo Facebook ஐ  $1 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்க தயாராக இருந்தது. Facebook ன் முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் யாஹூவிடம் விற்பதற்கு விரும்பும் தெரிவித்தனர். Facebook அந்த சமயத்தில் News Feed -ஐ அறிமுகம் செய்திருந்தது. அது நன்றாக சென்றால் Facebook ன் மதிப்பு $1 பில்லியன் டாலரைவிட அதிகமாக இருக்கும் என மார்க் ஜுக்கர்பெர்க் நம்பினார். ஆனால் யாஹூ Facebook ஐ அதிகமான விலைக்கு வாங்க தயாராக இல்லை. எனவே மார்க் ஜுக்கர்பெர்க் அதை நிராகரித்தார்.
இன்று Facebook தன்னை வாங்க நினைத்த Yahoo வை விட மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. 

 
2008 ஆம் ஆண்டு Microsoft நிறுவனம் $44.6 பில்லியன் டாலர் தொகைக்கு யாகூவை வாங்க தயாராக இருந்தது. ஆனால், இந்த விலை மிகவும் குறைவு என நினைத்த யாகூ அதனை நிராகரித்தது. ஆனால் இதை விட மிகக் குறைந்த விலைக்கு விற்க போகிறோம் என்பதை Yahoo அன்று அறிந்திருக்கவில்லை.
2012 வரை குறுகிய காலத்தில் யாஹூவில் பல தலைமை செயல் அதிகாரிகள் (CEO) மாற்றப்பட்டனர். சிஇஓ க்கள் மாறியும் யாஹூ வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை அதனால் திருப்தி அடையாத முதலீட்டாளர்கள் மற்றும்  இயக்குனர்கள் கூகுள் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்த Marissa Mayer ஐ சிஇஓ வாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஏற்கனவே வீழ்ச்சியில் இருந்த யாஹுவை மரிசா மேயராலும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லமுடியவில்லை.
2013 ஆம் ஆண்டு microblogging மற்றும் சமூக வலைத்தளமான Tumblr தளத்தை 1.1 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது யாகூ. ஆனால் Tumblrதளமும்  வீழ்ச்சியை சந்தித்தது. 
இப்போது மிகப் பெரிய தொலை தொடர்பு நிறுவனமான Verizon  $4.8 பில்லியன் டாலருக்கு Yahoo ஐ வாங்கியிருக்கிறது. மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த யாஹூ படிப்படியாக வீழ்ந்து இன்று அடிபாதாளத்திற்கு சென்றுள்ளது. இணையத்தை தன் கையில் வைத்திருந்த Yahoo வின் தோல்வி நிச்சயம் மற்ற இணையம் சார்ந்த நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.  

Tks

tnentrepreneur.com

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka