ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

தாய் கொலை: மகன் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி அருகே மகனால் தாக்கப்பட்ட பெண், திருவாரூர்
மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மாவதி (60). இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவரது கடைசி மகள் திருமணத்துக்காக தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து, பணத்தை வீட்டில் வைத்திருந்தாராம். இந்த பணத்தை பத்மாவதியின் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (29) செலவு செய்தாராம்.
இதை பத்மாவதி தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சுபாஷ்சந்திரபோஸ் கடந்த 21-ஆம் தேதி தனது தாய் பத்மாவதியை கோடாரியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பத்மாவதி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (செப்.23) இறந்தார். இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து, சுபாஷ்சந்திரபோûஸ தேடிவருகின்றனர்.

புதன், 21 செப்டம்பர், 2016

அல்ஸைமர்: ஆண்களும் பெண்களும் - ஒரு பார்வை


எல்லாப் பணிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்குக்கு கணிசமான ஆக்கத்திறன் தேவை. உடல் பயன்படுத்தும் மொத்த
ஆக்ஸிஜனில் 20 சதவிகிதத்தை மூளை பயன்படுத்திக் கொள்கிறது. புத்தம் புதிதாகப் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் மூளையின் எடை அப்போது பிறந்த ஒரு பெண் குழந்தையின் எடையை விட சற்று அதிகமாகவும், அளவிலும் பெரியதாகவும் இருக்குமாம்.

தலையின் சுற்றளவும், பெண் குழந்தையின் தலையின் சுற்றளவைவிட 2 சதவிகிதம் அதிகமாக இருக்கும். பெண் குழந்தையின் மூளையை விட  ஆண் குழந்தையின்  மூளை 12-20 சதவிகிதம் பெரியதாக இருக்கும். அளவில் வித்தியாசம் இருக்கும் நிலையில், ஆணும் பெண்ணும் அவர்களின், மூளைச் செயல்பாட்டில், திறனில் வித்தியாசம் இருக்குமா என்றால், நிச்சயம் இருக்கும் என்பதுதான் பதில்.

மூளையை லத்தீன் மொழியில் ‘செரிபிரம்’ என்பர். மனிதனின் உடல் எடையில் 50-ல் ஒரு பங்கு எடை கொண்டது மூளை. வயது வந்த ஓர் ஆணின் மூளை 1360 கிராமும், பெண்ணின் மூளை 1230 கிராமும் எடை கொண்டது. பொதுவாக, ஆண் மூளை, பெண் மூளையை விட 11-12 சதவிகிதம் அதிக எடை கொண்டது. எல்லாஆண்களுடைய மூளையும் ஒன்று-போலவேதான் இயங்கும். அவர்களுடைய மூளையில் எத்தனையோ விதமான எண்ணங்கள், சிந்தனைகள் தோன்றினாலும், கடைசியில் இரண்டுவிதமான உணர்வுகளில் முடிகிறது. ஒன்று பயம், இன்னொன்று இன்பம். இத்தகைய அமைப்பில்-தான் ஆண் மூளை உள்ளது. ஜாதி, மத, அந்தஸ்து வேறுபாடின்றி அனைத்து ஆண் மூளைகளின் இயக்கமும் இன்பம், பயம் என்ற இந்த இரண்டைச் சார்ந்தே உள்ளது. அதாவது சம்பாதிப்பது, இனச் சேர்க்கை, பணம், பட்டம், பதவி இவற்றை அடைந்து அதில் ஏற்படக் கூடிய சந்தோஷத்தை நோக்கி இயங்குதல், அடுத்ததாக ஈட்டிய அத்தனை சுகபோகங்களையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தை நோக்கி இயங்குதல்.

எடையில் பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை பெரியது என்றால், பெண்களைவிட ஆண்கள் புத்திசாலியாக இருப்பார்களோ?

பெண்களின் சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்

அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போகவே சித்தார்த்துக்குப் பிடிக்கவே இல்லை. வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம். அதுக்குக் காரணம், அன்றுதான் அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியாகிருந்தன. பத்தாவது படிக்கும் சித்தார்த், மிகவும் குறைவாக மார்க் வாங்கியிருந்தான். அதே நேரத்தில், அன்றைய தினமே 8-ம் வகுப்பில் படிக்கும் அவனுடைய தங்கை சுமதிக்கும் மதிப்பெண் பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவள்தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண். இதைக்கேட்டதும், சித்தார்த்துக்கு இன்னும் பயம் அதிகமாகிவிட்டது.

இவன் நினைத்ததுபோலவே, வீட்டில் அப்பாவும் அம்மாவும் அவனை திட்டித் தீர்த்துவிட்டார்கள். சுமதிக்கு நாங்க சொல்லிக்கொடுக்கறதே இல்லை. அவளே படிச்சு எப்படி மார்க் எடுத்திருக்கா பாரு. நீயும் இருக்கியே. நானும் அம்மாவும் ஆபீஸ்ல இருந்து வந்து உனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்குறோம். ஸ்பெஷல் டியூஷன் வேற போற. அப்படி இருந்தும் இப்படி மார்க் வாங்கியிருக்கியே. நீயெல்லாம் எப்படிப் படிச்சி பாஸ் பண்ணப்போறியோ தெரியல. இந்த லட்சணத்துல, ஸ்டேட் ரேங்க் வாங்கிக் காட்டறேன்னு சவால் வேற என்று அப்பா திட்டுவதைத் தலை குனிந்து கேட்டுக்கொண்டிருந்தான் சித்தார்த். இதுபோன்ற சம்பவங்கள் வீட்டுக்கு வீடு நடப்பது உண்டு. ஒவ்வோர் ஆண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால்,

ஆண்களைவிட பெண்களே அதிக சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கலாம். ஆண் குழந்தைகள் பொறுப்பின்றி ஊர் சுற்றுவதால், தேர்ச்சி விகிதம் குறைவு என்று கூறினாலும், பெண்கள் அதிக மதிப்பெண் பெற இயற்கையும் அவர்களுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். எப்படி?

மூளையை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று பிரித்திருக்கிறார்கள் எனப் பார்த்தோம். இதில், முன் மூளையை செரிபெரம் கார்டெக்ஸ் என்பார்கள். இப்பகுதியில்தான் பார்ப்பவை, படிப்பவை எல்லாம் நன்கு பதியத் தொடங்குகின்றன. பெண்களுக்கு இந்தப் பகுதி ஆண்களை விடவும் சற்று தடிமனாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுலபமாகச் சொன்னால், தடிமனான காகிதத்தில் எழுதியது, மெல்லிய தாளில் எழுதியதைவிட அழுத்தமாகவும், அதிக நாளும் இருக்கும். அதுபோல், பெண்களின் ஞாபக சக்தியும் ஆண்களைவிட சற்று அதிகமே.

நான் பேச நினைப்பதெல்லாம்...

அதேபோல், வளவளவென்று பெண்கள் பேசிக்கொண்டிருப்பதற்கும் அந்த செரிபெரம் கார்டெக்ஸின் அதிகப்படியான தடிமன்தான்  காரணம். ஆண்களால் பெண்களைப்போல் வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்த முடியாதாம். கிட்டத்தட்ட பெண்கள் ஒரு நாளில் பயன்படுத்தும் வார்த்தைகளில் பாதி அளவை மட்டுமே ஆண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். சரி, ஆண்-பெண் மூளைக்கு இடையே உள்ள சில முக்கியமான வித்தியாசங்களைப் பார்ப்போமா?


  • ஆண்(கள்) மூளை, பெண்(கள்) மூளையைவிட அளவில் சற்று பெரிதுதான். ஆனாலும், வயது ஏற ஏற பெண் மூளையைவிட சுருங்கிவிடுகிறது.
  • பெண் மூளை, குளுகோஸை அதிக அளவில் எரிப்பதால் உயர் வெப்ப நிலையில் இயங்குகிறது.
  • சிந்திக்கும்போது பெண்களே அதிகளவு மூளைத் திறனை  உபயோகிக்கின்றனர்.
  • மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும். இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
  • சாதாரணமாக ஓர் ஆணுக்கு 15 நிமிடத்துக்கு ஒருமுறை பாலுணர்வு தோன்றும். ஆனால், ஒரு பெண்ணுக்கோ ஒரு நாளில் ஒருமுறையோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோதான் தோன்றுமாம்.
  • பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது,மூளையின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தூண்டப்படுகிறதாம். இதனால்தான், பெண்- மணிகள் ஒலித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
  • தொந்தரவு தரக்கூடிய சிறு ஒலியைக்கூட, ஆண் குழந்தைகளைவிட பிறந்த பெண் குழந்தைகள்  எளிதில் கண்டுகொள்ளும். அதனால்தான், கணவனின் கடுமையான குறட்டைச் சத்தத்துக்கு இடையிலும் குழந்தையின் சிறு சிணுங்கலைக் கூட ஒரு பெண்ணால் கண்டுகொள்ள முடிகிறது.
  • ஒரு பெண்ணை 20 விநாடிகள் கட்டிப்பிடித்திருந்தாலே, ஆக்ஸிடாஸின் என்ற ரசாயனப் பொருள் அவள் மூளையில் சுரந்த்துவிடும். அதனால், கட்டிக்கொண்டு இருந்தவரின் மீது அந்தப் பெண்ணுக்கு அதீத நம்பிக்கை வந்துவிடுமாம்.
  • பெண்களைவிட ஆண்கள் மிகக் குறைந்த வார்த்தைப் பிரயோகங்களையே உபயோகப்படுத்துகிறார்கள் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.
  • எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான வித்தியாசம் இது. ஆராய்ச்சியாளர்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கும் சமீபத்திய கண்டுபிடிப்பு. அதாவது, ஆணுக்கு மூளையின் முன் பகுதியான செரிபெரம் கார்டெக்ஸில், நியூரான்கள்  எனப்படும் நரம்பு செல்கள் அதிகமாக இருக்கின்றன.
  • ஆனால், பெண்களுக்குக் குறைவாக இருக்கிறது. சரி, அதனால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். மூளை முழுவதும் கோடிக்கணக்கில் நியூரான்களின் நிறைந்திருக்கின்றன என்று ஏற்கெனவே பார்த்தோம். நியூரான்களின் உள்பகுதியில் கரு இருக்கும். வால் பகுதியில் ஆக்ஸான் எனப்படும் நரம்பிழைகள் கொத்துக் கொத்தாக இருக்கும். உடல் பகுதியில் இருந்தும் நரம்பிழைகள் கொத்தமல்லிக் கட்டுபோல் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டு


நரம்பிழைகள், அதேபோன்ற இன்னொரு கட்டு நரம்பிழைகள் வழியாகத் தொடர்புகொண்டிருக்கும். இந்த நரம்பிழைகளில் ஏதேனும் பாதிப்போ, குறைபாடோ ஏற்பட்டால், நரம்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும். இதனால், ஞாபக மறதி, நன்கு பரிச்சயமான நபர், இடம், மொழி போன்றவற்றில்கூட தடுமாற்றம் ஏற்படும்.  இது போன்ற பாதிப்புகளில் முதன்மையானது அல்ஸைமர் நோய் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏற்கெனவே, பெண்களின் மூளையில் நியூரான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று பார்த்தோம். இந்த நிலையில், அவர்களுடைய மூளையில் நரம்பிழைகளில் தொடர்பு அறுபடும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால்தான், ஆண்களைவிட பெண்களுக்கு அல்ஸைமர் நோயின்  தாக்கம் அதிகமாக இருக்கிறது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

சத்துணவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 3வது பேரவை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ரவிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மோகன்தாஸ் வரவேற்றார்.  ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் கார்த்தி, மாவட்ட இணை செயலாளர்கள் குணசேகரன், ராஜகணபதி மற்றும் தமிழ்ச்செல்வி, விஜயா, சுமதி,  சித்ரா ஆகியோர் பேசினர். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணியை முடிக்க  வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கால்நடைகள் அடைவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

சுகாதார சீர்கேடு: செடி, கொடி மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி வளாகம்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் தொட்டி இருக்கும்
வளாகம் முழுவதும் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் 2001ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 15 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் நகர பகுதிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியிலிருந்து தலைஞாயிறு, வேளூர், நெடும்பலம் போன்ற பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் அதிகாரிகளுக்கு அலுவலக கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. தற்போது குடிநீர் தொட்டி உள்ள வளாகம் முழுவதும் செடி, கொடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய பகுதி எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று யாருக்கும் தெரியவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுற்று பகுதி மற்றும் வளாகம் முழுவதும் பல்வேறு செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் விஷப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு, தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tks
Dina.Karan

புதன், 7 செப்டம்பர், 2016

அயனாவரம்_பிளாட்பாரம்_டு_லண்டன்.!

இதோ... இந்த நடை பாதையிலதான் நாங்க படுத்திருப்போம். மழை வந்தா, ஏதாவது கடைக்குக் கீழே ஒண்டிக்குவோம். திடீர்னு போலீஸ்காரங்க வந்து அடிச்சுத் துரத்துவாங்க. அப்பா, பெரும்போதைக்காரர்; என்னோட சின்ன வயசுலேயே செத்துட்டார். அப்பா இறந்த பிறகு, அம்மாவும் போதைக்கு அடிமையாகிட்டாங்க. சிக்னலுக்கு சிக்னல் நின்னு `அம்மா... அய்யா..!'னு கையேந்தி வாங்கியாற காசுல எங்களுக்குச் சாப்பாடு கிடைக்குதோ இல்லையோ, அம்மாவுக்கு சரக்கு வேணும். ஒரே ஒரு சொக்கா தான். அதுலயும் ஏகப்பட்ட தையல். பிறந்ததுல இருந்து முடியே வெட்டினது இல்லை. `இப்படி எல்லாம் இருந்தாத்தாண்டா இரக்கப்பட்டு காசு தருவாங்க'னு அம்மா சொல்லும். இந்த வாழ்க்கையில இருந்து மீண்டு, வெளியில வருவேன்னு நினைச்சுக்கூடப்பார்க்கலை'' - கண்களில் நீர் ததும்பப் பேசுகிறார் ஜெயவேல்.
50 வருடங்களுக்கு முன்னர், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த குடும்பம் ஜெயவேலுவுடையது. குழந்தைகளைப் பிச்சை எடுக்கச்செய்து குடிப்பதுதான் பெரும்பாலான பெரியவர்களின் தொழில். நாட்டின் குடிமக்கள் என்பதற்கான எந்த அத்தாட்சியும் இவர்களிடம் இல்லை. இப்படி ஒரு சமூகம் இருப்பதாக, அரசின் எந்தப் பதிவேட்டிலும் பதிவுகள் இல்லை. நீண்ட முடி வளர்த்து, கசங்கிக் கிழிந்த உடைகளை அணிந்து, குழந்தைகளை அகோரமாக்கிப் பிச்சை எடுக்கவைத்து, அன்றைய நாளின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியையுமே இலக்காகக்கொண்டு வாழும் இந்தச் சமூகத்தில் பிறந்த ஜெயவேல், இன்று லண்டன் கிளிண்ட்வர் யுனிவர்சிட்டியில் (Glyndwr University) ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் முடித்திருக்கிறார். அடுத்தகட்டப் படிப்புக்காக, இத்தாலிக்குப் பயணமாகும் பரபரப்பில் இருக்கிறார்.
இவரின் அம்மா லட்சுமிக்கு, சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை பிளாட்பாரம்தான் இப்போதும் வீடு. தன் வாழ்நாள் உடைமையான ஒற்றைப் பையை தலைக்கு வைத்துக்கொண்டு, கிழிந்த பாயில் படுத்திருக்கிறார். தன் மகன் எட்டிப் பிடித்திருக்கும் உயரம் பற்றி எதுவும் அந்தத் தாய்க்குத் தெரியவில்லை.
ஜெயவேலின் வாழ்க்கையை மாற்றியவர் உமா. `சிறகு' என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தும் இவர், குழந்தைத் தொழிலாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறார். ஓர் ஆவணப்படம் எடுப்பதற்காக வந்த இடத்தில் ஜெயவேலுவைப் பார்த்த உமா, அவரை தன் அமைப்பின் மூலம் தத்தெடுத்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
``நாடோடி சமூகமான எங்க மக்களுக்கு, சோறும் சாராயமும் கண்ட இடம் சொர்க்கம். குழந்தைகளைப் பிச்சை எடுக்கவைக்கிறதுதான் வாழ்வாதாரம். எனக்கு முன்னாடி யாரும் ஸ்கூல் வாசலைக்கூட மிதிச்சது இல்லை. எனக்கு மூணு அக்கா, ஒரு தம்பி. அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும். அயனாவரம் வாட்டர் டேங்க் பக்கத்துல ரோட்டோரத்துல இருந்தோம். பக்கத்துல இருக்கும் சிக்னல்ல நின்னு, வர்றவங்க...போறவங்ககிட்ட காசு கேட்பேன். கிடைச்ச காசை அம்மாகிட்ட கொடுத்தா, `போயி, சாராயம் வாங்கிட்டு வா'னு அனுப்பும்.
எங்க மக்களைப் பத்தி ஏதோ படம் எடுக்கிறோம்னு உமா மேடம் வந்தாங்க. எங்க ஆளுங்க எல்லாம் சேர்ந்து அவங்களை விரட்டினாங்க. எல்லாரையும் சமாதானப் படுத்தி, எங்ககூடவே தங்கி, வீடியோ எடுத்தாங்க. எங்க வாடை பட்டாலே முகம் சுளிக்கிற மனுஷங்களைத்தான் நாங்க பார்த்திருக்கோம். ஆனா உமா மேடம், எங்களை அவங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய் சாப்பாடு கொடுத்தாங்க. எங்க மக்களுக்கு அவங்க மேல பெரிய மரியாதை வந்தது.
அவங்கதான் என்னை ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. அதுவும் தனியார் பள்ளி. கிழிஞ்சுபோய் அழுக்குப் படிஞ்ச டவுசரோட, பரட்டைத்தலையோட அலைஞ்ச எனக்கு, முடிவெட்டி, ஷூ, சாக்ஸ், டை எல்லாம் போட்டு, ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டாங்க. என்னைப் பார்த்து என் தம்பியும் ஸ்கூலுக்கு வந்தான். அம்மாவுக்கு, நாங்க ஸ்கூலுக்குப் போறது பிடிக்கலை. சிக்னலுக்குப் போகச்சொல்லி விரட்டும். உமா மேடம் தேடி வர்றப்போ, ரெண்டு பேரையும் ஒளிச்சுவெச்சுடும். ஒருநாள் உமா மேடம் வந்து, என்னை அவங்க வீட்டுக்கே தூக்கிட்டுப் போயிட்டாங்க'' என, சின்னச் சிரிப்புடன் பேசுகிறார் ஜெயவேல்.
``நான் ஜெயவேலுவை `அந்நியன்'னுதான் அழைப்பேன். `ஸ்லுக்குப் போறியாடா?'னு கேட்டவுடனே, `போறேன்'னு சொல்லி, என்கூட ஒட்டிக்கிட்டான். ஆனா, அவன்தான் அந்தக் குடும்பத்தோட வாழ்வாதாரம். அப்பா, அம்மா யாரும் வேலைக்குப் போறது இல்லை. அவங்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையே இல்லை. குழந்தைகள் இயந்திரம் மாதிரி... அவங்களை எதற்காகவும் இழக்க விரும்ப மாட்டாங்க. முதல் வேலையா, ஜெயவேலுவைத் தூக்கிக்கிட்டு வந்து என் கூடவே வெச்சுக்கிட்டேன்.
அவனைப் பார்த்து மத்த பிள்ளைகளும் படிக்க வரும்கிற எண்ணத்துலதான் அப்படிப் பண்ணினேன். ஜெயவேலும் ரொம்ப ஈடுபாட்டோடு படிச்சான். மதிப்பெண்ணை இலக்கா வைக்காம, வாய்ப்புகளையும் அதை எட்டிப்பிடிக்கும் வழிமுறைகளையும் கத்துக்கொடுத்தோம். ஜெயவேலுவோட தம்பி ஆறுமுகமும் இங்கேதான் படிச்சான். ஆனா, அவங்க அம்மா சண்டைபோட்டு அவனைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. ஜெயவேலுவை, நான் அனுப்ப மறுத்துட்டேன். அவனுக்கு விவரம் தெரிஞ்ச பிறகு, அப்பப்போ போய் அம்மாவைப் பார்த்துட்டு வருவான்.
பத்தாம் வகுப்புல கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினான். ப்ளஸ் டூ ஸ்டேட்போர்டு எழுதினான். ஆங்கிலம், கணிதப் பாடங்களில் ரொம்பத் திறமையா இருந்தான். ஜெயவேலு ப்ளஸ் டூ முடிச்சதும், ஜப்பான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்துல 100 சதவிகித உதவித் தொகையோடு என்விரான்மென்டல் சயின்ஸ் படிக்கவும், சுவிட்சர்லாந்துல இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் எலெக்டிரிக்கல் படிக்கவும் வாய்ப்பு வந்தது. அவனுக்கு ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிப்பதுதான் கனவு. அதுக்காக, வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்துட்டு, லண்டன் கிளம்பிட். டான். முழுத்தொகையையும் `சிறகு' அமைப்பே கல்விக்கடனாக வழங்கியது. `உன்னோட மக்களை மாத்தணும்னா, நீ வெளிநாட்டுக்குப் போய் படிச்சு, உயர்வான வேலைக்குப் போகணும்'னு சொல்வேன். அதை முழுசா உள்வாங்கிக்கிட்டு, இப்போ பெரிய உயரத்துக்கு வந்திருக்கான் ஜெயவேல்'' எனப் பெருமிதம்கொள்கிறார் உமா.
“நான் வளர வளர, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது. எல்லாமே எனக்குப் புதுசா இருந்தது. `நான் எல்லாம் வெளிநாடு போய் படிக்க முடியுமா?'னு மனசுக்குள்ள கேள்வி... `தைரியமா கிளம்பு!'னு சொல்லி அனுப்பிவைச்சாங்க. லண்டன்ல, மாணவர்கள் வாரத்துக்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்யலாம். கிட்டத்தட்ட மாதம் 40,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதை வெச்சு சாப்பாடு, தங்கும் செலவைச் சமாளிச்சேன். புராஜெக்ட்ல வித்தியாசமான ஒரு காரைத் தயாரிச்சேன். பெட்ரோல், டீசல், சோலார்னு வெளியில் இருந்து வர்ற எந்த எனர்ஜியும் இல்லாம, டயரோட ரொட்டேட்டிங் எனர்ஜியில் 24 மணி நேரமும் ஓடக்கூடிய கார். அதை இன்னும் மேம்படுத்தணும். இப்போ இத்தாலியோட டாப் ரேங்கிங் யுனிவர்சிட்டியான டோரினா யுனிவர்சிட்டியில் முழு உதவித்தொகையோடு படிக்கப்போறேன்.
எங்க சமூகத்துல எனக்குப் பிறகு நிறையப் பசங்க, படிக்க ஆரம்பிச்சிருக்காங்க; பிச்சை எடுக்கிறதை விட்டுட்டாங்க. அதே சிக்னல்ல இப்போ புத்தகங்கள், துணிகள்னு விற்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறையப் பேர் ஆட்டோ ஓட்டுறாங்க. எனக்கு இன்னொரு கனவும் இருக்கு. அம்மா இன்னைக்கும் ஒரு துணிமூட்டையைத் தலைக்கு வெச்சுக்கிட்டு பிளாட்பாரத்துலதான் படுத்துக்கிடக்கு. காலம் கைகூடும்போது, ஒரு வீடு கட்டி அம்மாவை அங்கே கூட்டிக்கிட்டுபோய் வெச்சுக்கணும்'' என்னும் ஜெயவேலுவின் கண்கள் முழுக்கக் கனவுகள்.
நல்லது_நடக்கட்டும்.! 

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka