புதன், 5 ஏப்ரல், 2017

விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி,

விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை வழங்கவேண்டும். விவசாயிகள் வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் எழிலரசன் தலைமை தாங்கினார். மாநிலபொதுக்குழு உறுப்பினர் சங்கரவடிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாஸ்கர் வரவேற்றார். இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தலைவர் தாஹிர், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரசார் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பார்வையாளராக பொதுச்செயலாளர் அன்பு.வீரமணி, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் குகநாதன், வெங்கடேசன், நகர துணைத்தலைவர் பழக்கடை சண்முகம், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் தல.கோவிந்தராஜ், ஐ.என்.யு.சி. மாநில பொதுச்செயலாளர் என்.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், முத்துப்பேட்டை வட்டார செயலாளர் ஆனந்தரெட்டி, இளைஞர் காங்கிரசை சேர்ந்த ரோஜர் குமார், மணலி பிரகாஷ், காளிதாஸ், புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகரச்செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.

வருவாய்த்துறை அலுவலர் சங்கம்

இதேபோல திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வட்டச்செயலாளர் குணசீலன் தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் மதியழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக், வட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்



கோட்டூர் ஒன்றியம்,பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் காந்தாரி,பாம்புகனி, இடச்சிமூலை,மறவாதி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருகவாழ்ந்தான் ஊராட்சி பொதுமக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரியக்கோட்டை கூட்டுகுடிநீர்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது பெருகவாழ்ந்தான் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரில் உப்பு தன்மை அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெருகவாழ்ந்தானிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருணாவூர் கிராமத்திற்கு வரும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் இணைத்து பெருகவாழ்ந்தான் கிராமத்திற்குகுடிநீர்வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் மனுகொடுத்து கடந்த 10 ஆண்டுகளாக சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கடும் வறட்சியின் காரணமாக பெருகவாழ்ந்தான் பகுதியில் ஆழ்குழாய் கிணற்றிலும், கைபம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனே பெருகவாழ்ந்தான் பகுதி மக்களை சந்தித்து குடிநீர்தட்டுபாட்டை போக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். தினமும் வேன் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாமணி ஆற்றுப்படுகையிலிருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்துகுடிநீர் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பெருகவாழ்ந்தான் கடைவீதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேஸ்வரர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடுஏற்பட்டதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் மன்னார்குடி -முத்துப்பேட்டை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka