வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

இளம்பெண் மர்மச் சாவு


திருத்துறைப்பூண்டி,: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பெரியகொருக்கை பகுதியை சேர்ந்தவர் ஐயப் பன். இவருக்கும் இதே ஊரை சேர்ந்த முருகானந்தம் மகள் முகிலாவுக்கும் திருமணமாகி ஓராண்டாகிறது. குழந்தைகள் இல்லை. முகிலாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டார். கடந்த 7ம் தேதி திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனியின்றி நேற்று முன்தினம் முகிலா இறந்தார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார்  விசாரித்து வருகின்றனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka