
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
காரைக்குடி - சென்னை வழித்தடம் தமிழகத்தின் 120 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமையான ரயில் பாதையாகும். இந்த வழித்தடம், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, - விழுப்புரம், மயிலாடுதுறை - திருவாரூர் என மூன்று கட்டங்ளாக அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வருகிறது.


பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்போது தமிழக முதல்வர் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து புணிளை விரைந்து முடிக்க வேண்டுமென எழுதி உள்ள கடிதத்தில் இந்த திட்டம் பற்றி குறிப்பிடப்படாதது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழக முதல்வர் மத்திய அரசிடம் இத்திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி இந்த திட்டத்த்துக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக