ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவனின் தாய், சகோதரியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்

நாகையில் பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவனின் தாய், சகோதரியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.

கணவன் கைது

நாகை வெளிப்பாளையம் சிவன்தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி துர்காதேவி (25). இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரமணிகண்டன் இரும்பு கம்பியால் துர்காதேவியை தலையில் அடித்து கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரமணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணிகண்டனை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று துர்காதேவியின் உறவினர்கள் இந்த கொலை வழக்கில் வீரமணிகண்டனின் தாய், சகோதரி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறியும், அவர்களை உடனே கைது செய்யக்கோரியும் நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை 

இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துர்காதேவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து துர்காதேவியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka