
தோலில் பாதிப்பு உள்ள இடத்தில் 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு செய்துவர எரிச்சல் அடங்கி தோல் பழைய நிலைக்கு திரும்பும்.வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும். எரிச்சல், வியர்வை போன்றவற்றால் உடலில் அரிப்பு ஏற்படும். எனவே, நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். சோற்று கற்றாழையை பயன்படுத்தி தோலை பாதுகாக்கும் மருந்து தயாரிக்கலாம்.
சோற்று கற்றாழையின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சதையை எடுக்கவும். இதை தோலில் தடவினால் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். வியர்குருவை போக்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட சோற்றுக் கற்றாழை சருமத்துக்கு அழகு, ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி, உஷ்ணத்தால் தோலில் ஏற்படும் பாதிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

இதை வடிகட்டி எடுத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர், ஒரு மெல்லிய துணியில் நனைத்து தோலில் தடவினால் தோலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். காலை, மாலை இவ்வாறு செய்துவர சிவப்புதன்மை மறையும். உற்சாக பானமாக விளங்கும் டீ, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில் துவர்ப்பு சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை சாறு புண்களை விரைவில் ஆற்றும். எலுமிச்சை, டீ தூள் ஆகியவை தோலை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக