சனி, 21 மார்ச், 2015

கோட்டூர் பகுதியில் 27 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


கோட்டூர் பகுதியில் 27 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்ட கால் நடை பராமரிப்பு துறை சார் பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. கோட்டூர் ஒன்றி யத்தில் 49 ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் 8-வது கட்டமாக நடைபெற்றது.

கோட்டூர் ஒன்றியம் முழு வதும் உள்ள பல்வேறு கிரா மங்களில் நடைபெற்ற முகாம் களை திருவாரூர் மண்டல இணை இயக்குனர் டேவிட், மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர் லூர்துசாமி ஆகி யோர் ஆய்வு செய்தனர். இதில் கருப்புகிளார் நடை பெற்ற முகாமை இணை இயக் குனர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாடு களுக்கு தடுப்பூசி போட் டார்.

27 ஆயிரம் மாடுகள்

முகாமையொட்டி கால் நடை டாக்டர்கள் குமரேசன், செந்தில்குமார், ராஜன், பிர வீன், பிருந்தா, வித்யா ஆகி யோர் தலைமையிலான 6 மருத்துவ குழுவினர் நியமிக் கப்பட்டு இருந்தனர். இவர்கள் கிராமம் கிராமமாக சென்று, 27 ஆயிரத்து 941 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka