வெள்ளி, 5 டிசம்பர், 2014

திருத்துறைப்பூண்டிஅரசு பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலருக்கு மாநில அளவிலான விருது

திருத்துறைப்பூண்டி,:  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்ட மாநில குழுமம் சார்பில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலராக பணியாற்றி வரும் சக்கரபாணி மாநில அளவில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கான திட்ட அலுவலர்களில் சிறந்த திட்ட அலுவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மாநில அளவிலான சிறந்த திட்ட அலுவலருக்கான விருதை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தரராஜ் வழங்கி பாராட்டினார். 
மேலும் மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட சிறந்த மாணவ தொண்டர் விருது இந்த பள்ளியை சேர்ந்த லோகநாதன் என்ற மாணவனுக்கு வழங்கப்பட்டது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka