புதன், 24 ஜூன், 2015

மூதாட்​டி​யின் முகத்​தில் மிள​காய்​பொடி தூவி 11 பவுன் நகை,​​ ரொக்​கம் திருட்டு

திரு​வா​ரூர் மாவட்​டம்,​​ கோட்​டூர் அருகே மூதாட்​டி​யின் முகத்​தில் மிள​காய் பொடியை தூவி,​​ அவர் அணிந்​தி​ருந்த 11 பவுன் நகை,​​ பீரோ​வில் இருந்த ரூ.​ 5 ஆயி​ரம் ரொக்​கத்தை மர்ம நபர்​கள் திரு​டிச் சென்​ற​னர்.​

ஆதிச்​சப்​பு​ரம்,​​ அக்​கி​ர​ஹார தெரு​வைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற ஆசி​ரி​யர் ராமா​னு​ஜம் ​(85).​ இவர் வயது மூப்​பின் கார​ண​மாக நினைவு இல்​லாத நிலை​யில் வீட்​டில் இருந்து வரு​கி​றார்.​

ராமா​னு​ஜம் வீட்​டின் பின்​பக்​கக் கதவு செவ்​வாய்க்​கி​ழமை மாலை தட்​டப்​பட்​ட​தை​ய​டுத்து,​​ வீட்​டில் இருந்த அவ​ரது மனைவி கன​க​வல்லி ​(75) கதவை திறந்​துள்​ளார்.​ அப்​போது,​​ அங்கு நின்​று​கொண்​டி​ருந்த மர்ம நபர்​கள் சிலர் கன​க​வல்​லி​யின் முகத்​தில் மிள​காய் பொடியை தூவி​ன​ராம்.​ இதில்,​​ மயங்கி விழுந்த கன​க​வல்லி சுமார் 2 மணி நேரம் கழித்து மயக்​கம் தெளிந்து எழுந்​த​போது,​​ அவர் அணிந்​தி​ருந்த 11 பவுன் சங்கிலி பறிக்​கப்​பட்​ட​தும்,​​ பீரோ​வில் இருந்த ரூ.​ 5 ஆயி​ரம் திருட்​டுப் போன​தும் தெரி​ய​வந்​துள்​ளது.​ ​ ​

இது​கு​றித்து கோட்​டூர் காவல் நிலை​யத்​துக்கு தக​வல் அளிக்​கப்​பட்​டதை அடுத்து,​​ திருத்​து​றைப்​பூண்டி காவல் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் கண்​ண​தா​சன்,​​ கோட்​டூர் காவல் ஆய்​வா​ளர் ஆனந்​த​பத்​ம​நா​பன் ஆகி​யோர் சம்​பவ இடத்​துக்​குச் சென்று விசா​ரணை நடத்​தி​னர்.​ புகா​ரின் பேரில்,​​ கோட்​டூர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​துள்​ள​னர்.​ திருட்டு நடை​பெற்ற வீட்​டில் தடய பதி​வும்,​​ திரு​வா​ரூரி​லி​ருந்து அழைத்து வரப்​பட்ட மெர்சி மோப்​ப​நாய் கொண்​டும் சோதனை நடத்​தப்​பட்​டது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka