சொரக்குடியில் வேலைவாய்ப்புத்துறை, தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கம், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.

நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 57,315 பேர் பங்கேற்றனர். இதில் 19 மாற்றுத் திறனாளிகள் உள்பட 4,105 பேர் நேரடி நியமனம் பெற்றனர்.
மேலும், இதுதவிர திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக 3,446 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 605 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார் காமராஜ்.
ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப. மோகன் பேசியது:
முதலமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக ரூ. 85,000 கோடி நிதி ஒதுக்கி செலவிட்டுள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பல்வேறு மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறார். திருவாரூரில் நடைபெற்ற 13 ஆவது வேலைவாய்ப்பு முகாமில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 38 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் குறைந்தவர்களுக்காக திறன் மேம்பாட்டுக் கழகம் அமைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளுக்குத்தான் அதிகமாக தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை தொழிற்பேட்டை இல்லாததால், மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க உத்தரவிடப்பட்டு 27.55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் மோகன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக