பெருகவாழ்ந்தான் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணைத் தாக்கியதாக காதலனின் உறவினர்கள் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பெருகவாழ்ந்தான் காவல் சரகத்துக்கு உள்பட்ட மரவாதி, கீழத்தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பார்த்தசாரதியும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகள் தீபிகாவும் (20) காதலித்து வந்தனராம். தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாக பார்த்தசாரதி கூறியிருந்தாராம். இருவரும் பழகியதில் தீபிகா கர்ப்பமடைந்தார்.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தீபிகா கூறி வந்தார். ஆனால், பார்த்தசாரதி தாமதம் செய்து வந்தாராம்.
இந்த நிலையில் பார்த்தசாரதியின் வீட்டுக்கு தீபிகா சனிக்கிழமை சென்று பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த பன்னீர்செல்லம், அவரது மனைவி வசந்தா, மகன் பிரசாத், உறவினர் அன்பழகன், அவரது மனைவி பூபதி ஆகியோர் தாக்கியதில் தீபிகா காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தீபிகா அளித்த புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து பன்னீர்செல்வம் (48), அன்பழகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
tks
http://www.dinamani.com

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தீபிகா கூறி வந்தார். ஆனால், பார்த்தசாரதி தாமதம் செய்து வந்தாராம்.
இந்த நிலையில் பார்த்தசாரதியின் வீட்டுக்கு தீபிகா சனிக்கிழமை சென்று பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த பன்னீர்செல்லம், அவரது மனைவி வசந்தா, மகன் பிரசாத், உறவினர் அன்பழகன், அவரது மனைவி பூபதி ஆகியோர் தாக்கியதில் தீபிகா காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தீபிகா அளித்த புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து பன்னீர்செல்வம் (48), அன்பழகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
tks
http://www.dinamani.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக