
ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் குமணன், திருத்துறைப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் விஜயலட்சுமி, லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வகணபதி, பொருளாளர் வேதமணி, முன்னாள் செயலாளர் ஜோசப்ராஜ் ஆகியோர் பேசினர். தலைமைப்பண்பு என்கிற தலைப்பில் நெடும்பலம் பள்ளி ஆசிரியர் யோகராஜன் பேசினார். திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலரும், லயன்ஸ் கிளப் செயலாளருமான சக்கரபாணி நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. லியோ பொருளாளர் சக்தீஸ்வரன், மற்றும் திலிப்குமார், போஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக