
திருத்துறைப்பூண்டி நகர் மடப்புரம் மூட்டாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சிலம்பரசன் (29). இவர் ஆதிரெங்கம் கிராமத்தில் கூட்டுறவு அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
புதன்கிழமை மதியம் உணவு உண்பதற்காக வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். வேதாரண்யம் சாலை திருப்பத்தில் எதிரே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்சடி போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான மூலக்கரையைச் சேர்ந்த முருகானந்தத்தை கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக