செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

மகாத்மா காந்தி நினைவுநாள் பொதுக்கூட்டம்




திருத்துறைப்பூண்டி உழவர்சந்தை அருகில் மாவட்ட ஒன்றிய நகர திராவிடர் கழகம் சார்பில் மகாத்மா காந்தி நினைவுநாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகையன், துணைத்தலைவர் காந்தீசுவரன், ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஒன்றிய தலைவர் சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், துணைத்தலைவர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாகராஜன் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் பேசினார். நகர தலைவர் குணசேகரன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். வேதை ஒன்றிய தலைவர் ராமையன், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாசுகர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka