வியாழன், 12 பிப்ரவரி, 2015

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் தானிய ஈட்டுகடன்: திருவாரூர் கலெக்டர் தகவல்





திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி நல்ல முறையில் விளைச்சல் கண்டு அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல் தானியங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவும், விஞ்ஞான முறையில் சேமித்து வைப்பதற்கும் திருவாரூர் மாவட்டத்தில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் 78 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளும், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்த கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் விளை பொருளான நெல்தானியத்தை ஈடு வைத்து அதன் மதிப்பில் 70 சதவீதம் வரை தானிய ஈட்டுக்கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. தானிய ஈட்டுக்கடனுக்கு 13 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ. 3 லட்சம் வரை ஈட்டுக்கடன் வழங்கப்படுகிறது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் இந்த தானிய ஈட்டுக்கடனையும், கிடங்குகளையும், பயன்படுத்தி கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka