வியாழன், 12 பிப்ரவரி, 2015

வரம்பியம் ஊராட்சியில் கிராம விளையாட்டு போட்டி





தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வரம்பியம் ஊராட்சி இணைந்து நடத்திய கிராம விளையாட்டு போட்டி வரம்பியத்தில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய குழு தலைவர் தமிழ்மணி, அருள்சேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்காமாட்சி, அ.தி.மு.க. கிளை செயலாளர் பாலு, ஊராட்சி மன்ற துணை தலைவர் குளோரியஸ் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் கபடி, வட்டு எறிதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், பெண்களுக்கான கோலப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதில் மடப்புரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு வட்டு எறிதல், குண்டு எறிதல், கபடி போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி வழங்கினார். முடிவில் ஊராட்சி செயலர் காத்தமுத்து நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka