புதன், 25 பிப்ரவரி, 2015

பஸ்சில் பிக்பாக்கெட் வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி, : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே
உள்ள நங்காலி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஸ் (24). இவர் சென்னையில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரு கி றார். 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சதீஸ் நண் பர் மற்றும் உறவினர்களு டன் நேற்று முன் தினம் இரவு விளக்குடி பஸ் நிறுத்ததில் தனியார் பஸ்சில் ஏறி திருத்துறைப்பூண்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

சோழன் நகர் பஸ் நிறுத்தம் வந்தபோது டிக் கெட் எடுக்க பர்ஸை தேடியபோது, பர்ஸ் இல்லை.  திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் சதீஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் பஸ்சிலிருந்து பர்சை திருடிய வாலிபர் விளக்குடி மேலத்தெரு குழந்தைவேலு மகன் முருகானந்தம் ( 23) என்றும், பர்சில் ரூ.7 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது.  இந்நிலையில் திருத்துறைப்பூண்டி போலீசார் விளக்குடி போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் அரு கில் நின்று கொண்டிருந்த முருகானந்தத்தை கைது செய்து, ரூ.3,500ஐ பறி முதல் செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka