சனி, 7 பிப்ரவரி, 2015

பேருந்து மோதி லாரி ஓட்டுநர் சாவு


திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் சின்னக்குட்டி (எ) செல்வராஜ் (43). லாரி ஓட்டுநர். இவர், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பாண்டியிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
கள்ளிக்குடி அருகே சென்றபோது, நாகையிலிருந்து பேராவூரணிக்குச் சென்ற அரசுப் பேருந்து செல்வராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka