ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

திருவாரூர்: மக்கள் நீதிமன்றத்தில் 300 வழக்குகளுக்கு தீர்வு


திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்குத் தொடுத்தவர்கள் திரளானவர்கள் பங்கேற்று சுமுகத் தீர்வைப் பெற்றனர்.
மக்கள் நீதிமன்றத்தில் 5 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 19 சிவில் வழக்குகள், 23 காசோலை வழக்குகள் என சுமார் 1,500 வழக்குகளில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ. 1.80 கோடி தீர்வுத் தொகையாக இழப்பீடு வழங்கப்பட்டது.
நீடாமங்கலத்தில்... மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு நீதிபதி பெ. முருகன் தலைமை வகித்தார். நீடாமங்கலம் வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் கே. லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில், முதுநிலை எழுத்தர் கே. சீனிவாசன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka