சனி, 14 பிப்ரவரி, 2015

திருவாரூர் -காரைக்குடி தடத்தில் ரயில் இயக்க நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி,: திருவாரூர் -காரைக்குடி தடத்தில் ரயில் இயக்க

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.  
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ உலகநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை-கன்னியாகுமரி இரு வழித்தடம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு உரிய நிதி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்ச ருக்கு கடிதம் எழுதியிருப்பதை வரவேற்கிறேன்.

இதில் மிக முக்கிய வழித்தட மான சென்னை- காரைக் குடி -திருவாரூர் வரை அகலப்பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் முதல் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்லும் பாதை அகலப்பாதையாக மாற்றப்படாமல் உள்ளது. இதன் காரணமாக திருவாரூர் -காரைக்குடி வரையிலான பாதையில் ரயில் இயக்கப்படாமல் உள்ளது. அதுபோன்று திருத்துறைப்பூண்டி-கோடியக்கரை வரையிலான பாதையும் அகலப்பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்திடவும் மன்னார்குடி, கோட்டூர் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய ரயில் பாதை அமைத்திடவும், பேரளம்- காரைக்கால் வழித்தடத்தில் ரயில் இயக்கப்படவும் மத்திய அரசை வலியுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka