புதன், 11 பிப்ரவரி, 2015

முத்துப்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆசிரியை பலி: பொதுமக்கள் பீதி


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழ நம்மங்குறிச்சியை சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவரது மகள் கவிதா(20). அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5 நாட்களாக இவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.
மர்ம காய்ச்சலால் கவிதா இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சுகாதார பணியாளர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கவிதா மர்ம காய்ச்சலால் இறந்தாரா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மர்ம காய்ச்சலுக்கு ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka