வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டியில் அண்ணா சிலை திறப்பு


திருத்துறைப்பூண்டி,: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கீரக்களுர் ஊராட்சி திமுக சார்பில் அண்ணா உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. கீரக்களுர் கடைத்தெருவில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், முன்னாள் ஊராட்சி தலைவர் அருள்மேரி, மாவட்ட பிரதிநிதி வீரமணி, ஒன்றிய பிரதிநிதி பரமேஸ்வரன், முன்னாள் செயலாளர் தனபாலன், அவைத் தலைவர் கலியபெருமாள்  முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சாமிநாதன் வரவேற்றார். ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் புஷ்பநாதன் சிலையை திறந்து வைத்தார். முன்னாள் செயலாளர் தெட்சிணாமூர்த்தி, மாணவரணி துணை அமைப்பாளர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka