வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

திருவாரூர் மாவட்டத்தில் நாளை ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம்.


திருவாரூர் மாவட்டத்தில் நாளை  ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திருவாரூர் தாலுகா தப்பளாம்புலியூர் கிராமத்தில் திருவாரூர் ஆர்.டி.ஒ தலைமையிலும், நன்னிலம் தாலுக்கா பில் லூர் கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் தலைமையிலும், குடவாசல் தாலுக்கா கூந்தநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுக்கா விளத்தூர் கிராமத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுக்கா ரிஷியூர் கிரா ஷமத்தில் டி.எஸ்.ஒ   தலைமையிலும், மன்னார் குடி தாலுக்கா சோழப்பாண்டி கிராமத்தில்  மன்னார்குடி ஆர்.டி.ஒ தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுக்கா எழிலூர் கிராமத்தில் மன்னார்குடி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் தலைமையிலும் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நாளை 14ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. 

எனவே, பொதுமக்கள் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், குறித்த தங்களது கோரி க்கை மனுக்களை அளித்து  பயன்பெறலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka