சனி, 7 பிப்ரவரி, 2015

மாணவிக்கு தொந்தரவு வாலிபர் கைது


திருத்துறைப்பூண்டி,: பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ள கூறி தொந்தரவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தனுஜா(15). (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு வந்தபோது பள்ளி அருகே ஸ்ரீதர் (21) என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறி கூறி தொந்தரவு செய்தார். இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, எஸ்ஐ அருள்பிரியா ஆகியோர் வழக்குபதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka