வெள்ளி, 20 மார்ச், 2015

தாலியை கழற்றி வைத்து விட்டு திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம்


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் புதுத்தெரு பாலு மகன் யுவராஜ் (34) இவருக்கும் திருபுவனம் கோவிந்தராஜன் மகள் மல்லிகா (27) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11–ந்தேதி திருமணம் நடந்தது. 

மல்லிகா கணவனோடு ஒரு மாதமாக குடும்பம் நடத்தி வந்தார். கணவர் வீட்டில் மல்லிகா தனது மாங்கல்யத்தை கழற்றி வைத்து விட்டு மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் காணவில்லை. 

இதனால் கணவர் யுவராஜ் வலங்கைமான் காவல் நிலையத்தில் மல்லிகாவை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka