வெள்ளி, 20 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம்


திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். தாசில்தார் மதியழகன் வரவேற்றார். முகாமில் 22 பேருக்கு கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 22 பேருக்கு புதிய குடும்ப அட்டை, புதுவாழ்வு திட்டத்தின்கீழ் 2 பேருக்கு தனிநபர் கடன், 4 பேருக்கு தையல் இயந்திரம், வேளாண்மைத்துறை சார்பில் 4 பேருக்கு வேளாண் கருவிகள், தோட்டக்கலை சார்பில் 5 பேருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. ஆர்டிஓ செல்வசுரபி, மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், ஆதிதிராவிட நல அலு வலர் அசோகன், ஒன்றியக்குழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு மற்றும் பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka