செவ்வாய், 3 மார்ச், 2015

வாலிபருக்கு அரிவாள் வெட்டு; வீட்டுக்கு தீ வைப்பு முத்துப்பேட்டை அருகே பரபரப்பு



முன் விரோதம் காரணமாக நடந்த தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதன் எதிரொலியாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் முத்துப்பேட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் மஞ்சு கோட்டகத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் வருண் (வயது19). அதே ஊரை சேர்ந்தவர் மகாதேவன். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வருண் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மகாதேவனும், அவருடைய நண்பர்கள் சிலரும் வருணை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் கழுத்து, தோள் பட்டை, கை உள்பட உடலின் பல பாகங்களில் படுகாயம் அடைந்த வருண் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எடையூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்கு தீவைப்பு

இதன் எதிரொலியாக வருண் நண்பர்கள் மகா தேவனின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. இதேபோல மகா தேவனின் நண்பர் ராஜேந் திரன் என்பவருடைய வீடும் சூறையாடப்பட்டது. அரிவாள் வெட்டு, வீட்டுக்கு தீ வைப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அருண், அன்பழகன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மஞ்சுகோட்டகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka