வெள்ளி, 20 மார்ச், 2015

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேளூர் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கனி (50). இவர் கடந்த வாரம் அதே ஊரைச் சேர்ந்த விஜயன் என்பவரது வயலில் இருந்த வைக்கோலை டிராக்டரில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, டிராக்டரின் மேல்பகுதியிலிருந்து கனி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka