சனி, 21 மார்ச், 2015

விவசாயிகள் பலன் அடைய “உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்” உதவும் கலெக்டர் மதிவாணன் தகவல்


விளை பொருட்களை நேரடியாக விற்க வாய்ப்பு இருப்பதால் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயி கள் பலன் அடைய உத வும் என கலெக்டர் மதி வாணன் கூறினார்.

கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் வேளாண்மை அறி வியல் நிலையத்தில் வேளாண்மை விற்பனை மற் றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்தல் திட்டம் தொடர்பான கருத்த ரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதிவாணன் கருத் தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:-

விவசாயிகளை அடிப்படை உறுப்பினர் மற்றும் பங்கு தாரர்¢களாக கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் களை உருவாக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இந்த திட் டத்தால் வேளாண்மை உற் பத்தியை பெருக்கவும், விளை பொருட்களின் தரத்தை உயர்த்தவும் முடியும். இந்த திட்டத்தின் மூலம் தங்கள் விளைபொருட்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே விவசாயிகள் அதிக பலன் அடைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உதவும்.

வேளாண் உற்பத்தியாளர் களை வலுப்படுத்துதல், சந்தை யில் வேளாண்மை பொருட் களுக்கு அதிக விலை கிடைத் தல், வணிகத்தில் விவசாயி களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துதல் ஆகியவை இத் திட்டத்தின் முக்கிய நோக்கங் கள்.

இன்றைய நிலை

அதிக விளைச்சல் காணும் விவசாயிகளுக்கு கூட விளை பொருட்களை சந்தையில் விற்கும்போது உரிய விலை கிடைப்பது இல்லை. இதுதான் இன்றைய நிலை. ஆனால் உழவர் உற்பத்தியாளர் நிறு வனம் அமைத்தல் திட்டத்தின் மூலம் நேரடியாக விளை பொருட்களை விற்பதால் நுகர்வோர் கொடுக்கும் விலை யில் 60 சதவீதம் விவசாயி களுக்கே கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

தனி விவசாயி ஒருவரால் சந்தை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது சிரமம். எனவே விவசாயிகள் ஒரு குழு வாக இணைந்து செயல்படும் வகையில் இந்த திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை நிர்ணயம் செய் யும் உரிமையை பெற முடியும். பொருட்களை மதிப்பு கூட்டி விற்க முடியும். உயர் தொழில் நுட்பங்களை உரிய நேரத்தில் கற்று கொள்ளவும், வங்கி கடனை பெறவும் முடியும்.

மத்திய அரசின் பங்கு தொகை

இதை உணர்ந்துதான் தமி ழக அரசு வேளாண்மை சந்தை தகவல் மற்றும் வணிக மேம் பாட்டு மையத்தை திருச்சியில் அமைத்துள்ளது. மத்திய அரசு உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்களுக்காக கொள்கை விதிகளை வகுத்து விவசாயி களுக்கு உதவ முன் வந்துள்ளது. சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு மூலம் 1000 உழவர்களை பங்குதாரர் களாக கொண்டு, ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் களுக்கு ரூ.10 லட்சம் வரை பங்கு தொகை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசி னார்.

வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சோழன், வேளாண்மை வணிக துறை துணை இயக்குனர் மனோ கரன், மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியநாராயணன், தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரெங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka