சனி, 14 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டியில் எல்ஐசி புதிய பாலிஸி அறிமுக விழா




திருத்துறைப்பூண்டி எல்ஐசி கிளை அலுவலகத்தில் எல்ஐசியின் புதிய பாலிஸியான ஜீவன் லக்ஷய் அறிமுக விழா  நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் சுரேஷ்பாபு  புதிய பாலிஸியை அறிமு கம் செய்து துவக்கி வைத் தார். நிர்வாக அதிகாரி ஸ்ரீதர், மூத்த ஊழியர் அமர்சிங், வளர்ச்சி அதிகாரி சாய்ராம், பாலிஸிதாரர் சவ்கத்அலி மற்றும் முகவர்கள், பாலிஸிதாரர்கள் குத்துவிளக்கேற்றினர்.  கிளை மேலாளர் பாலசங்கர் பேசுகையில், 18 வயது முதல் 50 வயது வரையிலான நபர்களு க்கு இது ஏற்ற பாலிஸி. 

குறைந்த பட்ச காப்பீடு ரூ.1 லட்சம். அதிக பட்ச வரம்பில்லை. பாலிஸி காலம் 13 முதல் 25 வருடங்கள் வரை பிரிமியம் செலுத்தும் காலம். பாலிஸி காலத்தைவிட 3 ஆண்டுகள் குறைவாக செலுத்தினால் போதும். பாலிஸிதாரர் பாலிஸி காலத்தில் இறக்க நேரிட்டால், ஒவ்வொருவருக் கும் பாலிஸி தொகையில் 10 சதவீதம் வழங்கப்படும்.  பாலிஸி முதிர்வின் போது முழு பாலிஸித் தொகை, போனஸ் மற் றும் இறுதி கூடுதல் போனஸ் வழங்கப்படும்.  ரூ.1,50,000 வருமானவரி விலக்கு உண்டு. ஏற்கெ னவே பாலிஸி வைத்திருந் தாலும் கூட இந்த பாலிஸி ஒவ்வொரு பாலிஸிதார ருக்கும் ஏற்றது என்றார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka