சனி, 14 மார்ச், 2015

காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை





திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து, திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்ற நீதிபதி எம். மகாலெட்சுமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் கள்ளிக்குடி கிராமத்தில் கடந்த 29.6.2009-ல் நடைபெற்ற சாலை விபத்தில் எக்கல் கிராமத்தைச் சேர்ந்த சீத்தாராமன் உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் மணிமாறன் பலமுறை நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பியும், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிடிஆணை பிறப்பித்து நீதிபதி மகாலெட்சுமி உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka