புதன், 18 மார்ச், 2015

கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


திருவாரூரில் கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் நேற்று கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி திரு வாரூர் பழைய ரெயில் நிலை யம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ் முன் னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெய சந்திரன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

கள்ளச்சாராயத்தை குடித் தால் கண்பார்வை இழப்பு, நினைவாற்றல் குறைதல், உடல் உறுப்புகள் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும். தொழில் பாதிக்கப் பட்டு சமூக மரியாதையை இழக்க நேரிடும். மனச்சோர் வுக்கு ஆளாவார்கள். குடும்ப மும் பாதிக்கப்படும்.

கள்ளச்சாராயத்தில் உள்ள மெத்தனால் மரணத்தை ஏற்படுத்த கூடியது. எனவே தான் கள்ளச்சாராயம் பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக விழிப்பு ணர்வு பேரணி நடத்தப்படு கிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முன்னதாக கள்ளச்சாராயம் பற்றிய விழிப் புணர்வு கையேட்டை மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ் வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணை கலெக்டர் விஜ யலட்சுமி, கூடுதல் போலீஸ் சூப் பிரண்டு அனார் கலிபேகம், சமூக நலத்துறை அதிகாரி கீதாகிருஷ்ணவேணி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka