வியாழன், 5 மார்ச், 2015

தோட்டத்தில் ஆடு மேய்ந்ததால் தகராறு: தாய் அடித்து கொலை-விவசாயி கைது





திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லை விளாகம் ஓமங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவரது மனைவி ரேவதி (50). இவர் தனது வீடு அருகே கடலை பயிர் செய்துள்ளார். இந்த பயிரை அதே பகுதியை சேர்ந்த விவசாயி வடிவேலு ஆடு மேய்ந்தது.
இதனை ரேவதியின் மகள் வேதவள்ளி தட்டிக்கேட்டார். அவர் வடிவேலு, அவரது மனைவி முருகவள்ளி ஆகியோரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த வடிவேலு அவரது உறவினர் மலர்வேந்தன் ஆகியோர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் வேதவள்ளியை தாக்கினார்கள்.
இதனை ரேவதி தடுக்க வந்தார். அப்போது அவரையும் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் அவர் இறந்தார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட ரேவதி உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி வடிவேலை கைது செய்தனர். மலர்வேந்தன் தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வருகிறார்கள். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka