சனி, 14 மார்ச், 2015

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை





திருவாரூர் அருகே உள்ள வைப்பூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 11–ந் தேதி அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்தி (வயது23) என்பவர் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பக்கிரியம்மாள் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி அன்புராஜ் கார்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்தியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka