சனி, 21 மார்ச், 2015

ரெயில்வே பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் முடிவு


பட்ஜெட்டில் கோரிக்கை கள் நிராகரிக்கப்பட் டதை கண்டித்து போராட்டம் நடத்த ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கோரிக்கைகள் நிராகரிப்பு

ரெயில்வே ஒப்பந்த தொழி லாளர் சங்க அகில இந்திய கூட்டமைப்பின் துணை செய லாளரும், ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில தலைவருமான மனோகரன் நீடாமங்கலத்தில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

ரெயில்வேயில் சுமை தூக் கும் தொழிலாளர்களுக்கு ரெயிலில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்குவதை போல், ரெயில்வேயில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கும் இலவச பாஸ் வழங்க வேண்டும். ரெயில்வேயில் குரூப் டி வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ரெயில்வே துறை நிர்ணயித்த தினக் கூலியை ரெயில்வேயில் துப் புரவு தொழிலாளர்களுக்கு ஒப்பந்தக்காரர்கள் முறையாக வழங்க வேண்டும். மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அமல் படுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே ஒப்பந்த தொழி லா ளர்கள் வலியுறுத்தி வந்தோம். இதுதொடர்பாக ரெயில்வே மந்திரியிடம் பட்ஜெட் தாக் கல் செய்யப்படுவதற்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட் டுள்ளன.

போராட்டம்

கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டதால் இந்திய ரெயில்வே யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை கண் டித்தும், அனைத்து கோரிக்கை களையும் உடனே நிறைவேற்ற கோரியும் போராட்டம் நடத்த ஒப்பந்த தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அகில இந்திய கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகிற 25-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka