செவ்வாய், 12 ஜூலை, 2016

அண்ணாநகர் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருத்துறைப்பூண்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ரமேஷ் (வயது36). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார், சதீஷ், சங்கர், முனியப்பன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று ரமேஷ் அங்குள்ள பெட்டிக்கடையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து ரமேசை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka