ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கணவரைக் காணவில்லை: மனைவி புகார்

வேதாரண்யம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கணவரைக் காணவில்லை என பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நெய்விளக்கு தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதிபா(21). கச்சநகரம் கலியபெருமாள் மகன் பழனி(22). இருவரும் திருவாரூர் திருவிக அரசுக் கல்லூரியில் படித்தபோது காதலித்துள்ளனர். இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பழனி வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதிபா வீட்டார் சம்மதத்துடன் கடந்த 15.11.2015-இல் திருமணம் நடைபெற்று, பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 19.12.2015 அன்று சென்னைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பழனி இதுவரை ஊர் திரும்பவில்லையாம்.

இதையடுத்து, தனது கணவரைக் கண்டுபிடித்து தரும்படி வேதாரண்யம் காவல் நிலையத்தில் பிரதிபா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka