புதன், 13 ஏப்ரல், 2016

தேர்தலில் விகிதாச்சார வெற்றி தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் மனு

திருத்துறைப்பூண்டி, :  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் அகமுடையார் தெருவை சேர்ந்த நாகரத்தினம் (56) நேற்று மனு அளித்தார். ஒவ்வொரு வேட்பாளரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் மக்களிடம் பெற்றுள்ள வாக்கு உரிமைகளை சதவீத அளவில் கணக்கிட வேண்டும். அந்த சதவீத அளவுக்கு உண்டான காலங்கள் வரை (60 மாதங்களில் அனைவருக்கும் பணி நாட்களை பகிர்ந்தளிப்பு செய்து கொடுத்தல்) வரிசையாக பாகுபாடின்றி சட்டமன்றத்துக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் விகிதாசார வெற்றி தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும். அல்லது சம உரிமை வெற்றி தேர்வு முறையை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அமல்படுத்தி வெற்றி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி சிவா, வருகிற 18ம் தேதி நாகரத்தினத்தை ஆஜராக உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka