![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_s3dXIe8x6K9THIWmhXuYsMySeHAt0lpdAWklyg6GB33uNcDT-obY9YoFZpAN3v8cSVXYMdvOzHzW6or8sauihvxSKffbNFk4iGurlbeLWRbsNledl3EGS_TH4WvzLPYDylM8qM0-o7ewRBnqLO10BqacJ9pv376If4TFpjNxGVfMvqEcZg2NoDjKVVgYe7x6JdDGQc7DwMvq5LSqlrZcgOEg=s0-d)
திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்துறைப்பூண்டி மற்றும் ஆலிவலம் காவல் சரகங்களில் எஸ்.பி ஜெயசந்திரன் நேரடி மேற்பார்வையில் ஏடிஎஸ்பி அப்துல்லா, டிஎஸ்பி கண்ணதாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன் தினம் இரவு சோதனை நடத்தினர். இதில் சாராயம் விற்ற மீனாட்சி வாய்க்கால் காந்திமதி (58), கொக்கலாடி ரேவதி (48), பள்ளங்கோயில் சுப்ரமணியன் (45), செல்வராஜ் (48), பிச்சன்கோட்டகம் பாலசுப்ரமணியன் (48), வேலூர் ராஜேந்திரன் (43), குரும்பல் ராஜா (31) உள்ளிட்ட 9 பேரை கைது செய்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி சிவா 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் 9 பேரையும் சிறையில் அடைத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக