சனி, 16 ஏப்ரல், 2016

அம்பேத்கர் பிறந்தநாள் : அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் பிறந்தநாள்
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் நகர செயலாளர் சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர்கள் சிங்காரவேலு, நடராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தே.மு.தி.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ஜமால், நகர செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட செயலாளர் மகாமுத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி வக்கீல் சங்கம் சார்பில் தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் வக்கீல்கள் பாஸ்கர், பாலமுரளி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துப்பேட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மாநில துணைச்செயலாளர் பழனிச்சாமி, உலகநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் செல்வன், மாவட்ட பொருளாளர் வெற்றி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பூமிநாதன், மாவட்ட துணை செயலாளர் முல்லைவளவன், நகர செயலாளர் தங்கசுரேஷ், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பி.எஸ்.என்.எல். சேவா கிளை துணை செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் குணசேகரன், நிர்வாகி நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நடராஜன், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் மாநில துணை செயலாளர் குணசேகரன், என்.எப்.டி.இ. நிர்வாகிகள் சிவா, சீதாராமன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலதண்டாயுதம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka