![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_t5X5LeK62EnNpLPXNn_uP7eBGghjuhUyPNFCjTFsAR3x1PXgbMHTlagnf0kTdgBgwWp8ZWbLCf_E6jCbo9fErutHfKipHz38YydOQah9FqtrNPJw=s0-d)
திருத்துறைப்பூண்டி–மன்னை சாலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருடைய மனைவி கல்பனா(வயது27). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது மர்மநபர் யாரோ வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.ஆயிரத்தை திருடி விட்டு தப்பி முயன்றார். அப்போது சத்தம் கேட்டு கல்பனா திடீரென மர்மநபரை பிடித்தார். உடனே மர்மநபர், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கல்பனா திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் வீரபரஞ்ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக