புதன், 20 ஏப்ரல், 2016

அதிமுக வேட்பாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு ஜாக்கெட் பிட், துண்டு வழங்கியதாக அதிமுக வேட்பாளர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி வண்ணமுடையப்பர் ஐயனார் கோயிலில் கடந்த 17ம் தேதி அதிமுக சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெறவில்லை. மேலும் கூட்டத்தில் மாற்று கட்சியிலிருந்து வந்த பெண்களுக்கு ஜாக்கெட் பிட்டும், ஆண்களுக்கு துண்டும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி, தொகுதி பொறுப்பாளர் வக்கீல் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, மாவட்ட துணை செயலாளர் பாலதண்டாயுதம், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சீராளன், ஊராட்சி செயலாளர் அருண்மொழி ஆகிய 7 பேர் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தமிழ்ச்செல்வன் புகார் செய்திருந்தார். இதையடுத்து போலீசார் வேட்பாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka