வெள்ளி, 30 ஜனவரி, 2015

திருவாரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை


திருவாரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன்.

பள்ளி, கல்லூரி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலாó முக்கண்ணன் மேற்பார்வையில்

வாகன ஆய்வாளாó ராஜேந்திரன் தலைமையில் அலுவலர்கள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகில் பள்ளி மாணவாóகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் உரிய தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட இரண்டு ஆட்டோ, ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலாó முக்கண்ணன் கூறியது:

பள்ளி, கல்லூரி வாகனங்கள் விதிமுறைகளை மீறக் கூடாது.

மீறினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே பள்ளி வாகனங்கள் ஆட்டோ, வேன்கள் அரசு விதித்துள்ள எண்ணிக்கையில் மாணவாóகள் ஏற்றி செல்ல வேண்டும் என்றார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka