புதன், 21 ஜனவரி, 2015

திருத்துறைப்பூண்டியில் நாளை லாரி உரிமையாளர்கள் நலசங்க ஆயில் ஸ்டோர் திறப்பு விழா




திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நல சங்க ஆயில் ஸ்டோர் திறப்பு விழா நாளை 23ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10 மணியளவில் லாரி உரிமையாளர்கள் நல சங்க கட்டிடத்தில் நடைபெறும் விழாவிற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகிக்கிறார். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமரசாமி குத்துவிளக்கு ஏற்றி ஆயில் ஸ்டோரை திறந்து வைக்கிறார். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செல்வராஜ் முதல் விற்பனையை துவக்கி வைக்க லாரி உரிமையாளர்கள் துரைராஜ், ஜோதிமணி பெற்றுக் கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் அக்ரோ சீனிவாசன், கௌரவ தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் சேகர், துணை செயலாளர் குணசேகரன் மற்றும் லாரி உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka