சனி, 10 ஜனவரி, 2015

நூணக்காடு, கொத்தமங்கலம் கிராமத்திற்கு வரும் 12ம்தேதி முதல் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் நூணக்காடு, கொத்தமங்கலம் கிராமத்திற்கு வரும் 12ம்தேதி முதல் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி அனைத்து கிராமங்களிலும் ஏற்கனவே நடைபெற்றுள் ளது. பணியின்போது புகைப்படம் எடுக்காதவர்கள் திருத்துறைப்பூண்டி  வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மையத் தில் வருகிற 12ம்தேதி முதல் 25ம் தேதி வரை நூணக்காடு மற்றும் கொத்தமங்கலம் கிராமங்களில் உள்ளவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப் படம் எடுக்க வரும் போது குடும்ப அட்டை மற்றும் ஒப்புகை சீட்டு ஆகியவற்றை தவறா மல் கொண்டுவர வேண்டும். விடுமுறை நாட்கள் தவிர அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று தாசில்தார் மதியழகன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka