புதன், 28 ஜனவரி, 2015

பெண் சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது



திருவாரூர், ஜன. 27: திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கொக்கலாடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி பிரேமா (46) சட்டவிரோதமாக புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்து வந்தார். காவல் துறையினர் பல்வேறு வழக்குகள் தொடுத்தும், எச்சரித்தும் பிரேமா சாராய விற்பனையை நிறுத்தவில்லையாம்.

எனவே, பிரேமாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் பரிந்துரைத்தார். இதையடுத்து ஆட்சியர் எம். மதிவாணன் உத்தரவின் பேரில், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீஸார் சாராய வியாபாரி பிரேமாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka