சனி, 10 ஜனவரி, 2015

ஜேசீஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருத்துறைப்பூண்டியில் ஜேசீஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு எம்எல்ஏ கே. உலகநாதன் தலைமை வகித்தார். சாசனத் தலைவர் வழக்குரைஞர் ஆர்.கே.பி.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் பி. ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

புதிய தலைவர் ஜி. சிவசைலம், செயலர் ஆர். அரவிந்த், பொருளாளராக எஸ். வினோத் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கு மண்டலத் தலைவர் ஆர். சதீஷ்பாபு, துணைத் தலைவர் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தனர். ராகவேந்திரா மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடையும், முதியோருக்கு போர்வையும் வழங்கப்பட்டது. தலைவர் ஜி. சிவசைலம் ஏற்புரையாற்றினார். விழாவில் நகர மேம்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் டி. ராஜா, ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ஆர். இளங்கோவன், லயன்ஸ் மாவட்டத் தலைவர் ஆர். செல்வகணபதி, நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் எஸ். ராஜ்நாராயணன் வரவேற்றார். செயலர் ஆர்.அரவிந்த் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka